தேசப்பற்று பற்றாக்குறை ?



இந்தியாவின் இரண்டு பிரபலங்களின் நடத்தையைக் கண்டு திகைத்து நிற்கிறது நாடு. கிரிக்கெட் இந்தியாவின் சமயம் என்றால் டெண்டுல்கர் எங்கள் தெய்வம் எனக் கொண்டாடியவர்களும் புதிய இந்தியாவின் சிற்பி, நாராயணமூர்த்தி எங்கள் வருங்கால குடியரசுத் தலைவர் என்று கொண்டாடியவர்களும் முக்காடு போட்டு திரிய வேண்டியதாயிற்று.

சச்சின் தேசியக் கொடி வண்ண கேக்கை வெட்டினாராம்; நாராயணமூர்த்தி நாட்டுப்பண்ணை மற்றவர்களுக்கு முன் பாட தயங்கினாராம். இருவருமே தங்களது ஊடகத்தினால் வளர்க்கப் பட்ட மாயபிம்பத்தை தக்கவைத்துக் கொள்ள விளக்கங்களும் மன்னிப்புகளும் அளித்துள்ளனர்.

தனது ஹெல்மெட்டில் நாட்டுக் கொடியின் வண்ணங்கள் பதிய போராடிய டெண்டுல்கரா இவ்வாறு நடக்கக் காரணங்கள் என்ன ? இந்திய பொருளாதாரத்திற்கே ஒரு வழிமாற்றம் தந்து தற்போதைய குடியரசுத்தலைவராலேயே அடுத்து அவர் வருவதற்கு 'fantastic '
என பாராட்டு பெற்றவர் தடுமாற காரணம் என்ன ? மக்கள் தங்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை மறந்திருந்தாலும் உள்ளத்தில் நாட்டுப்பற்று இல்லைதானே என்று புலம்ப வைத்து விட்டார்களே. சிலர் கூறுவதுபோல பணம் என்றால் நாட்டுப்பற்றும் பறந்து போமோ ?

இல்லை பாமரர்கள் நாம்தான் உணர்ச்சிவயப் படுகிறோமா?்்ளதளள்ள்

கல்வெட்டு: ..and he is a chief mentor for infosys...

4 மறுமொழிகள்:

Anonymous கூறுகிறார்

சச்சின் கண்டிப்பாக இதற்கு மன்னிப்பு கேட்பார். நாராயணமூர்த்தி மன்னிப்பு கேட்டு விட்டார்.
என்னைக் கேட்டால் நாராயணமூர்த்தி செய்ததது தவறு. மற்றவர்களுக்காக தேசியகீதம் பாடாமல் இருப்பது அவசியமற்றது.
சச்சின் செய்தது அப்படி ஒன்றும் பெரிய தவறு இல்லை. தேசிய கொடியில் அவர் கேக் செய்ததே அவரது நாட்டுப்பற்றின் காரணமாகத் தான் இருக்கும்.மேலும் அவர் இதை தெரிந்து செய்திருக்கமாட்டார். மற்றும் ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு அதைச் செய்தால் அவமதிப்பு இதைச் செய்தால் அவமரியாதை என்று கடுமையான மற்றும் தவறிழைக்கும் வாய்ப்புகள் மிகுதியான நடத்தை விதிகளை ஒருவரிடம் திணிப்பதும் எதிர்பார்ப்பதும் தவறு என்று நான் நினைக்கிறேன்

Anonymous கூறுகிறார்

//நாராயணமூர்த்தி நாட்டுப்பண்ணை மற்றவர்களுக்கு முன் பாட தயங்கினாராம்.//

நீலச் சாயம் வெளுத்து போச்சு.

சதுக்க பூதம் கூறுகிறார்

Few months before, Mr.Narayana moorthy removed his communist MASK.Now he started showing his originality(As he doesn't need his mask anymore)

மணியன் கூறுகிறார்

வருகை தந்த அனானிகளுக்கும் சதுக்கபூதத்திற்கும் நன்றி.

//நீலச் சாயம் வெளுத்து போச்சு// விளங்கவில்லை :(

//Few months before, Mr.Narayana moorthy removed his communist MASK//
நாட்டுப்பற்றிற்கும் கம்யூனிசத்திற்கும் என்ன தொடர்பு ?

திரட்ட: இப்பதிவின் மறுமொழிகள் (Atom)