சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா ?

மைய அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) விவசாய நிலங்களை பெருந்தனக்காரர்கள் அபகரிப்பதற்கான வழிவகை என்ற கூற்றை இந்த நேர்காணலில் அரசின் வணிகச் செயலரும் சி.பொ.ம ஒப்புதல் ஆணையத்தின் தலைவருமான ஜிகே பிள்ளை மறுதளிக்கிறார். அரசு தரப்பு வாதங்களை அறிய அவரது உரையாடல் வழிவகுத்தாலும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவரது எதிர்வினைகள் ஒரு தொழிலதிபரின் பார்வையிலேயே உள்ளன. உதாரணமாக ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை அரசு கையகப் படுத்தி அங்கு கேளிக்கை விடுதிகளும் நீச்சல்குளங்களும் கட்டுவது சரியா என்ற கேள்விக்கு

One of the common allegations against SEZ is that industrialists are padding up demand to get land. There is an allegation against Tata that in Singur they need much less than 1,000 acres. How can you take away land that has great emotional value for people under the pretext of designer swimming pools and artificial landscapes?

There is a study that shows that most farmers whose land is being acquired are subsistence farmers. I am not denying that they have an attachment to land and all that. But do you want them to continue to be a subsistence farmer and earn $1 a day? Or you want to give them an opportunity to move out of it?

No country in the world where 65 per cent of the population is dependent on agriculture can be helped to raise their income.

There is a limit to how much you can improve their income by tilling one acre of land. Industrial development takes place not only for these 650 million farmers, but everybody.
அவர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகள், அவர்களுக்குக் கிடைக்கும் ஈட்டுப்பணம் அவர்களது நிலமிழப்பை மறக்கச் செய்துவிடும் என்கிற பொருளில் கூறியிருப்பது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.

உழவும் தொழிலும் நாட்டின் இரு கண்கள். ஒன்றை இழந்து மற்றொன்றை வளர்ப்பது வேண்டுமா ?

வலையுலக சேற்றிற்கு எதிராக இராகுல்காந்தி வழக்கு


பஜரங் தள வலைத்தளமான Hinduunity.org இன் ரோஹித் வியாஸ்மான் மற்றும் போடேக்கு எதிராக தவறான செய்திகளை வெளியிடுவதாக இராகுல் காந்தி மானநட்ட வழக்கு தொடுத்துள்ளார். அமேதி தொகுதி யில் அவரது நடவடிக்கைகளைக் குறித்த அந்த செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சாங்க்வி கூறியுள்ளார். இது பற்றிய யாஹூ செய்தியில் காங்கிரஸ் தலைவர்கள் இதுபற்றி கருத்துக் கூறமறுப்பதை சுட்டியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் அமெரிக்க வார இதழ் நியூஸ்வீக் அவர் பட்டதாரி என்பதும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதும் உண்மையில்லை என்று வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.